contact

Sunday, 17 January 2010

மௌன போராட்டம்


அதிகாலை பனியில்
குளித்திடும்
அழகான மலர்போல்
எதிர்படுகையில்
உன் ஆடை அலங்காரத்தை
நி அணிந்திருக்கும் புன்னகையை
மருண்ட மான்
விழிகளில் தெரியும்
உற்சாகத்தை
பாராட்டதான் ஆசை  எனக்கு
ஆனால்
அரை நிமிடம் நின்று
பேசினால் கூட
நீல கண்ணாடி போட்டு
நம்மை காணுமோ
இந்த உலகம் என சிந்தையில்
வினா எழ
வாய் வரை வந்த வார்த்தைகள்
தொண்டைகுழியில் சிறை வைக்கப்படுகின்றன
வார்த்தைகளின் போராட்டம்
கண்களில் மௌனமாக!

0 comments:

Post a Comment