தனிமை இனிக்கவில்லை
உன்னைதவிர எதிலும் கவனம்
நிலைக்கவில்லை
ஊண் உறக்கம் எதையும்
உள்ளம் கேட்கவில்லை
உன் குரல் கேட்க
உன் முகம் நோக்க
உன்னை ஸ்பரிசித்து உயிர்தெழ
காத்திருக்கின்றன ஐம்புலன்களும்
உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும்
உலகம் மெல்ல உருளுவதாய்
தோன்றுகிறது எனக்கு
ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது
பெரும் போராட்டமாய் இருக்கிறது
நிலைமை மோசமாகிகொண்டிருக்க
நீயோ வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறாய்


0 comments:
Post a Comment