contact

Thursday, 26 November 2009

காதல் தோல்வி




கிஞ்சித்தும்
கலையா உன்
மௌன புகைமூட்டத்தின் நடுவே
ஓர் மெல்லிய புன்னகை
ஒளிக்கிற்று
தோன்றியபோது நான்
அறியேன் - அது
என் அந்திமகாலத்தின்
ஆரம்பமென்று
கடைக்கண் பார்வையால்
என் கண் வழியே
இதயத்துள் இடம் பிடித்து
இதயத்தின் தந்திக்கம்பிகளை
நீ மீட்ட தொடங்கியபோது
தெரியாது எனக்கு
அது என் வாழ்வின்
சோக கீதமென்று
ஒவ்வொரு முறையும்
எனை கடந்து செல்கையில் 
குளிரிளம் தென்றலாய்
தழுவி சென்றபோது
நான்
அறியவில்லை பெண்ணே அது
ஊழி காத்துக்கு
கட்டியம் கூறும் சாரலென்று
மெல்லிய புன்சிரிப்பையும்
கயல் விழிகளின்
காதல் மொழிகளையும்
கண்டு - உன்
முகவிலாசங்களில் மூழ்கிவிட்ட
நான்
எதிர்பார்க்கவில்லை என் வாழ்வின்
அஸ்தமனத்திற்கு
அதிக தூரமில்லை என்று
கடற்கரை மணல் மீது
காதல் மொழி பேசி
கடல் நீரில் கால் நனைத்தபோது
அலைகளின் அழுகை
எனக்காகதான் என்பதை
அறியாமல் போனேன் பெண்ணே !

0 comments:

Post a Comment