contact

Wednesday, 14 October 2009

மறதி

இன்று 
எப்படியாவது  சொல்லிவிடவேண்டும் 
தினமும் கண்ணாடியில் 
பிம்பம் பார்த்து 
தைரியப்படுத்தி கொள்கிறேன் என்னை 
உன்னிடம் 
பேச நினைக்கும் 
வார்த்தைகளை  வாக்கியப்படுத்துகிறேன் 
பயணிக்கும் எறும்பு கூட்டம் போல 
நிழல்களிடம்  பேசி ஒத்திகை பார்க்கின்றேன் 
ஆனால் 
உன்னை பார்த்த 
மகிழ்ச்சியில்  என்னென்னவோ
உன்னிடம் பேசி சிரித்து 
மணிக்கணக்கில்  ஆனபின்   
நாளை பார்க்கலாம்  - என 
இருவரும் விடைபெற்றபின்  தான் 
நினைவுக்கு வருகிறது 
நான் 
உன்னிடம் சொல்லவந்ததை  
சொல்ல மறந்தது !



0 comments:

Post a Comment