இன்று
எப்படியாவது சொல்லிவிடவேண்டும்
தினமும் கண்ணாடியில்
பிம்பம் பார்த்து
தைரியப்படுத்தி கொள்கிறேன் என்னை
உன்னிடம்
பேச நினைக்கும்
வார்த்தைகளை வாக்கியப்படுத்துகிறேன்
பயணிக்கும் எறும்பு கூட்டம் போல
நிழல்களிடம் பேசி ஒத்திகை பார்க்கின்றேன்
ஆனால்
உன்னை பார்த்த
மகிழ்ச்சியில் என்னென்னவோ
உன்னிடம் பேசி சிரித்து
மணிக்கணக்கில் ஆனபின்
நாளை பார்க்கலாம் - என
இருவரும் விடைபெற்றபின் தான்
நினைவுக்கு வருகிறது
நான்
உன்னிடம் சொல்லவந்ததை
சொல்ல மறந்தது !

0 comments:
Post a Comment