ஒவ்வொரு முறை
உனை பார்க்கும்போதும்
உன்னை சிறை பிடிக்க துடிக்கிறது
மனசு
ஐம்புலன்களும்
உன்னில் சங்கமிக்க தவிக்கின்றன
உன்னை தொட கைகள் நீட்டும் வேளையில் தான்
மனதில் உறைக்கிறது
உனக்கும் எனக்கும்
பல ஓளி ஆண்டுகள் தூரமென்பது !
"பொங்கிவழியும் நேசத்தின் சில துளிகள்"
0 comments:
Post a Comment