contact

Thursday, 15 October 2009

பயம்

எனக்கு பயமாய் இருக்கிறது
உன் நினைவுகள் என்னுள் பெருகிவருகின்றன
மழைக்கால ஈசலாய்
ஓவ்வொருநாளும் 
கண் விழித்திடுகையில்
கடவுளைவிட 
நீதான் நினைவுக்கு வருகிறாய்
காலை மலர்களை கண்ணுருகையில்
நெஞ்சுக்குள் நிறைகிறாய் நீ
கதைகளை  கவிதைகளை
ரசிக்கையில் - ஏனோ
உன் நினைவுகள்  என்னை நிரப்புகின்றன
அந்தி சூரியனின் ஆனந்தத்தில்
உன் அபிநயங்கள் எந்தன் உள்ளத்தில்
கண் மூடும்போதும்
கனவுகளில் உயிர்த்திருக்கிறாய் நீ
கொஞ்சம் கொஞ்சமாய் 
தொலைந்து கொண்டிருக்கிறேன்  நான்
உன்னுள்
பயமாய் இருக்கிறது எனக்கு!!
 

0 comments:

Post a Comment