contact

Thursday 22 October 2009

கடிதம்


தினமும்
உனக்காக  ஏதேனும்
எழுத நினைக்கயில்
வார்த்தைகள் கிடைக்கவில்லை எனக்கு
உன்னை நினைக்கயில்
வேறெதையும்
நினைக்க மறுக்கிறது மனசு
நாளை முயற்சி செய்கிறேன்
உன்னைப்பற்றி எழுத

பயணம்


இரயில்  பயணங்களில்
எத்தனை முயன்றும்
தவிர்க்க முடியவில்லை
உறுத்தும்
தனிமையும்
உன் நினைவையும்
கடிகாரம்
மிக மெல்ல நகர்வதாய்
தோன்றுகிறது எனக்கு
மனம் வேகமாய்
மிக வேகமாய்
ஓடி வருகிறது  புகைவண்டி முன்னால்
உன்னை பார்க்கும்
நொடியை எண்ணி
நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்

Sunday 18 October 2009

தூரம்

ஒவ்வொரு முறை
 உனை பார்க்கும்போதும்
உன்னை சிறை பிடிக்க  துடிக்கிறது
மனசு
ஐம்புலன்களும்
உன்னில் சங்கமிக்க  தவிக்கின்றன
உன்னை தொட கைகள் நீட்டும் வேளையில்  தான்
மனதில் உறைக்கிறது
உனக்கும் எனக்கும்
பல ஓளி ஆண்டுகள்  தூரமென்பது !

பேரழகி


கவிதைக்கு  பொய்  அழகாம்
நான் கவிஞன் இல்லை
பொய் சொல்லவும் தெரியவில்லை
உண்மையை  சொல்வதானால்
ஒரு வரியில் சொல்வதானால்
என் உலகத்தின்
பேரழகி நீ!

Thursday 15 October 2009

பயம்

எனக்கு பயமாய் இருக்கிறது
உன் நினைவுகள் என்னுள் பெருகிவருகின்றன
மழைக்கால ஈசலாய்
ஓவ்வொருநாளும் 
கண் விழித்திடுகையில்
கடவுளைவிட 
நீதான் நினைவுக்கு வருகிறாய்
காலை மலர்களை கண்ணுருகையில்
நெஞ்சுக்குள் நிறைகிறாய் நீ
கதைகளை  கவிதைகளை
ரசிக்கையில் - ஏனோ
உன் நினைவுகள்  என்னை நிரப்புகின்றன
அந்தி சூரியனின் ஆனந்தத்தில்
உன் அபிநயங்கள் எந்தன் உள்ளத்தில்
கண் மூடும்போதும்
கனவுகளில் உயிர்த்திருக்கிறாய் நீ
கொஞ்சம் கொஞ்சமாய் 
தொலைந்து கொண்டிருக்கிறேன்  நான்
உன்னுள்
பயமாய் இருக்கிறது எனக்கு!!
 

Wednesday 14 October 2009

மறதி

இன்று 
எப்படியாவது  சொல்லிவிடவேண்டும் 
தினமும் கண்ணாடியில் 
பிம்பம் பார்த்து 
தைரியப்படுத்தி கொள்கிறேன் என்னை 
உன்னிடம் 
பேச நினைக்கும் 
வார்த்தைகளை  வாக்கியப்படுத்துகிறேன் 
பயணிக்கும் எறும்பு கூட்டம் போல 
நிழல்களிடம்  பேசி ஒத்திகை பார்க்கின்றேன் 
ஆனால் 
உன்னை பார்த்த 
மகிழ்ச்சியில்  என்னென்னவோ
உன்னிடம் பேசி சிரித்து 
மணிக்கணக்கில்  ஆனபின்   
நாளை பார்க்கலாம்  - என 
இருவரும் விடைபெற்றபின்  தான் 
நினைவுக்கு வருகிறது 
நான் 
உன்னிடம் சொல்லவந்ததை  
சொல்ல மறந்தது !