தினமும்
உனக்காக ஏதேனும்
எழுத நினைக்கயில்
வார்த்தைகள் கிடைக்கவில்லை எனக்கு
உன்னை நினைக்கயில்
வேறெதையும்
நினைக்க மறுக்கிறது மனசு
நாளை முயற்சி செய்கிறேன்
உன்னைப்பற்றி எழுத
Thursday 22 October 2009
பயணம்
இரயில் பயணங்களில்
எத்தனை முயன்றும்
தவிர்க்க முடியவில்லை
உறுத்தும்
தனிமையும்
உன் நினைவையும்
கடிகாரம்
மிக மெல்ல நகர்வதாய்
தோன்றுகிறது எனக்கு
மனம் வேகமாய்
மிக வேகமாய்
ஓடி வருகிறது புகைவண்டி முன்னால்
உன்னை பார்க்கும்
நொடியை எண்ணி
நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்
எத்தனை முயன்றும்
தவிர்க்க முடியவில்லை
உறுத்தும்
தனிமையும்
உன் நினைவையும்
கடிகாரம்
மிக மெல்ல நகர்வதாய்
தோன்றுகிறது எனக்கு
மனம் வேகமாய்
மிக வேகமாய்
ஓடி வருகிறது புகைவண்டி முன்னால்
உன்னை பார்க்கும்
நொடியை எண்ணி
நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்
Sunday 18 October 2009
தூரம்
ஒவ்வொரு முறை
உனை பார்க்கும்போதும்
உன்னை சிறை பிடிக்க துடிக்கிறது
மனசு
ஐம்புலன்களும்
உன்னில் சங்கமிக்க தவிக்கின்றன
உன்னை தொட கைகள் நீட்டும் வேளையில் தான்
மனதில் உறைக்கிறது
உனக்கும் எனக்கும்
பல ஓளி ஆண்டுகள் தூரமென்பது !
உனை பார்க்கும்போதும்
உன்னை சிறை பிடிக்க துடிக்கிறது
மனசு
ஐம்புலன்களும்
உன்னில் சங்கமிக்க தவிக்கின்றன
உன்னை தொட கைகள் நீட்டும் வேளையில் தான்
மனதில் உறைக்கிறது
உனக்கும் எனக்கும்
பல ஓளி ஆண்டுகள் தூரமென்பது !
பேரழகி
கவிதைக்கு பொய் அழகாம்
நான் கவிஞன் இல்லை
பொய் சொல்லவும் தெரியவில்லை
உண்மையை சொல்வதானால்
ஒரு வரியில் சொல்வதானால்
என் உலகத்தின்
பேரழகி நீ!
நான் கவிஞன் இல்லை
பொய் சொல்லவும் தெரியவில்லை
உண்மையை சொல்வதானால்
ஒரு வரியில் சொல்வதானால்
என் உலகத்தின்
பேரழகி நீ!
Thursday 15 October 2009
பயம்
எனக்கு பயமாய் இருக்கிறது
உன் நினைவுகள் என்னுள் பெருகிவருகின்றன
மழைக்கால ஈசலாய்
ஓவ்வொருநாளும்
கண் விழித்திடுகையில்
கடவுளைவிட
நீதான் நினைவுக்கு வருகிறாய்
காலை மலர்களை கண்ணுருகையில்
நெஞ்சுக்குள் நிறைகிறாய் நீ
கதைகளை கவிதைகளை
ரசிக்கையில் - ஏனோ
உன் நினைவுகள் என்னை நிரப்புகின்றன
அந்தி சூரியனின் ஆனந்தத்தில்
உன் அபிநயங்கள் எந்தன் உள்ளத்தில்
கண் மூடும்போதும்
கனவுகளில் உயிர்த்திருக்கிறாய் நீ
கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்து கொண்டிருக்கிறேன் நான்
உன்னுள்
பயமாய் இருக்கிறது எனக்கு!!
உன் நினைவுகள் என்னுள் பெருகிவருகின்றன
மழைக்கால ஈசலாய்
ஓவ்வொருநாளும்
கண் விழித்திடுகையில்
கடவுளைவிட
நீதான் நினைவுக்கு வருகிறாய்
காலை மலர்களை கண்ணுருகையில்
நெஞ்சுக்குள் நிறைகிறாய் நீ
கதைகளை கவிதைகளை
ரசிக்கையில் - ஏனோ
உன் நினைவுகள் என்னை நிரப்புகின்றன
அந்தி சூரியனின் ஆனந்தத்தில்
உன் அபிநயங்கள் எந்தன் உள்ளத்தில்
கண் மூடும்போதும்
கனவுகளில் உயிர்த்திருக்கிறாய் நீ
கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்து கொண்டிருக்கிறேன் நான்
உன்னுள்
பயமாய் இருக்கிறது எனக்கு!!
Wednesday 14 October 2009
மறதி
இன்று
எப்படியாவது சொல்லிவிடவேண்டும்
தினமும் கண்ணாடியில்
பிம்பம் பார்த்து
தைரியப்படுத்தி கொள்கிறேன் என்னை
உன்னிடம்
பேச நினைக்கும்
வார்த்தைகளை வாக்கியப்படுத்துகிறேன்
பயணிக்கும் எறும்பு கூட்டம் போல
நிழல்களிடம் பேசி ஒத்திகை பார்க்கின்றேன்
ஆனால்
உன்னை பார்த்த
மகிழ்ச்சியில் என்னென்னவோ
உன்னிடம் பேசி சிரித்து
மணிக்கணக்கில் ஆனபின்
நாளை பார்க்கலாம் - என
இருவரும் விடைபெற்றபின் தான்
நினைவுக்கு வருகிறது
நான்
உன்னிடம் சொல்லவந்ததை
சொல்ல மறந்தது !
எப்படியாவது சொல்லிவிடவேண்டும்
தினமும் கண்ணாடியில்
பிம்பம் பார்த்து
தைரியப்படுத்தி கொள்கிறேன் என்னை
உன்னிடம்
பேச நினைக்கும்
வார்த்தைகளை வாக்கியப்படுத்துகிறேன்
பயணிக்கும் எறும்பு கூட்டம் போல
நிழல்களிடம் பேசி ஒத்திகை பார்க்கின்றேன்
ஆனால்
உன்னை பார்த்த
மகிழ்ச்சியில் என்னென்னவோ
உன்னிடம் பேசி சிரித்து
மணிக்கணக்கில் ஆனபின்
நாளை பார்க்கலாம் - என
இருவரும் விடைபெற்றபின் தான்
நினைவுக்கு வருகிறது
நான்
உன்னிடம் சொல்லவந்ததை
சொல்ல மறந்தது !