contact

Sunday 20 December 2009

பொய் கோபம்



எல்லோர் கேள்விகளுக்கும்
பதிலளிக்கும் நான்
பதிலிருந்தும் மௌனிக்கிறேன்
உன்னிடம் மட்டும்
எல்லாம் தெரிந்திருந்தும்
ஏனோ
தினமும் கேட்கிறாய் "ஏன் தாமதம்?"
ஒவ்வொரு நாள் முன்னிரவு நேரங்களில்
இப்படித்தான் ஆகின்றது
என் மேல் உன் அக்கறையின் 
வெளிப்பாடாய் உன் பொய் கோபம்
என்னை ஊமையாக்குது!

Tuesday 1 December 2009

அடங்காமலே மனம்


அடங்காமலே மனம்
அடாவடி செய்யுதடி
அருகில் நீ இல்லையென அறிந்திருந்தும்
பார்க்கும் பெண்களில்
பாவை உன்னை தேடுதடி
பகலிரவை மறந்து
பழைய நினைவுகளில் முழ்குதடி
என்னதான் செய்தாலும்
என் பேச்சை கேட்க மறுக்குதடி
நான் சொல்வதை செய்ய சொல்லி
நீயாவது சொல்லடி
என் மனதிடம்