contact

Sunday 20 December 2009

பொய் கோபம்



எல்லோர் கேள்விகளுக்கும்
பதிலளிக்கும் நான்
பதிலிருந்தும் மௌனிக்கிறேன்
உன்னிடம் மட்டும்
எல்லாம் தெரிந்திருந்தும்
ஏனோ
தினமும் கேட்கிறாய் "ஏன் தாமதம்?"
ஒவ்வொரு நாள் முன்னிரவு நேரங்களில்
இப்படித்தான் ஆகின்றது
என் மேல் உன் அக்கறையின் 
வெளிப்பாடாய் உன் பொய் கோபம்
என்னை ஊமையாக்குது!

2 comments:

Unknown said...

லவ் பண்ணா எப்படியும் ஊமையாதான் போகணும் .... போய் கோவம் நு பொய்யாய் ஒரு விளக்கம் வேற ,,, ஹும் கவிதைக்கு பொய் அழகு ,,,,,

Unknown said...

இருவரின் காதல் மற்றவர்களுக்கும் ஏதோ ஒரு வழியில் மகிழ்ச்சியின் கொடுக்குமாயின் அது காதலால் கிடைக்கும் கூடுதல் பயன்பாடு. ஆனால், இயல்பாக அப்படி நிகழ்வதில்லை. அதனால் தான் காதல் செய்பவர்களை தவிர மற்றவர்களால் அது விரும்பப்படுவதில்லை

Post a Comment