அதிகாலை பனியில்
குளித்திடும்
அழகான மலர்போல்
எதிர்படுகையில்
உன் ஆடை அலங்காரத்தை
நி அணிந்திருக்கும் புன்னகையை
மருண்ட மான்
விழிகளில் தெரியும்
உற்சாகத்தை
பாராட்டதான் ஆசை எனக்கு
ஆனால்
அரை நிமிடம் நின்று
பேசினால் கூட
நீல கண்ணாடி போட்டு
நம்மை காணுமோ
இந்த உலகம் என சிந்தையில்
வினா எழ
வாய் வரை வந்த வார்த்தைகள்
தொண்டைகுழியில் சிறை வைக்கப்படுகின்றன
வார்த்தைகளின் போராட்டம்
கண்களில் மௌனமாக!
Sunday 17 January 2010
Wednesday 6 January 2010
காத்தாடி
நூலறுந்த
காத்தாடியாய் ஆகிப்போனேன்
காற்றடிக்கும் திசையெங்கும்
அலைந்துகொண்டிருக்கிறேன்
பிடித்து நிறுத்துவார் யாருமின்றி
விழுந்துவிட விருப்பமில்லை
வாழ்ந்திடவும் பெரிய திட்டமில்லை