யுகம் யுகமாய்
காத்திருந்தேன்
சுழலும் வாழ்க்கை சக்கரத்தில்
சுழலா அச்சாணியாய் தேய்ந்திருந்தேன்
உன்னில் கரைந்துவிடவா?
உலகையே துச்சமாக நினைக்கும் உள்ளம்
உன் கடைக்கண் பார்வையில்
கடமை மறக்குதடி
யாருக்கும் அடங்கா காளையின்
மூக்கணாங்கயிறாயிருக்கிறாய் நீ எனக்கு
சந்தோசங்களுக்கு குறைவில்லை என்றாலும்
அருகில் நீ இல்லையடி சினேகிதி
கல்நெஞ்சம் காலத்திற்கா உனக்கா?
எதாகிலும் தனிமை தண்டனை எனக்கா?
Monday 20 December 2010
Wednesday 18 August 2010
நாம் தமிழர்களா?
தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்றான் ஒரு கவி
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது ஒன்றுமில்லை
என்றான் ஒரு கவி
எல்லாம் பழங்கதையாகி போனது
ஊரெங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடுகள்
உண்மையில்
கன்னி தமிழ்
கற்பிழந்து விட்டது பிற மொழி கலந்து
பேசும் இரண்டு மூன்று
வாக்கியங்களுக்குள்
நான்கைந்து பிறமொழி சொற்கள்
ஆரம்பம் முதலே ஆங்கில கல்வியாம்!
தமிழ் எழுத படிக்க தெரியாத
தமிழ்நாட்டு குழந்தைகள்
வரிவடிவமில்லா மொழிகளெல்லாம்
வாழ்விழந்து போனதை அறிந்திருந்தும்
தமிங்கிலிஷ் குறுந்தகவல்கள்
தமிழ் பேசினால் மட்டும்
நாம் தமிழர்களா?
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்றான் ஒரு கவி
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது ஒன்றுமில்லை
என்றான் ஒரு கவி
எல்லாம் பழங்கதையாகி போனது
ஊரெங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடுகள்
உண்மையில்
கன்னி தமிழ்
கற்பிழந்து விட்டது பிற மொழி கலந்து
பேசும் இரண்டு மூன்று
வாக்கியங்களுக்குள்
நான்கைந்து பிறமொழி சொற்கள்
ஆரம்பம் முதலே ஆங்கில கல்வியாம்!
தமிழ் எழுத படிக்க தெரியாத
தமிழ்நாட்டு குழந்தைகள்
வரிவடிவமில்லா மொழிகளெல்லாம்
வாழ்விழந்து போனதை அறிந்திருந்தும்
தமிங்கிலிஷ் குறுந்தகவல்கள்
தமிழ் பேசினால் மட்டும்
நாம் தமிழர்களா?
Sunday 16 May 2010
ஒரு நொடியில்
Sunday 17 January 2010
மௌன போராட்டம்
அதிகாலை பனியில்
குளித்திடும்
அழகான மலர்போல்
எதிர்படுகையில்
உன் ஆடை அலங்காரத்தை
நி அணிந்திருக்கும் புன்னகையை
மருண்ட மான்
விழிகளில் தெரியும்
உற்சாகத்தை
பாராட்டதான் ஆசை எனக்கு
ஆனால்
அரை நிமிடம் நின்று
பேசினால் கூட
நீல கண்ணாடி போட்டு
நம்மை காணுமோ
இந்த உலகம் என சிந்தையில்
வினா எழ
வாய் வரை வந்த வார்த்தைகள்
தொண்டைகுழியில் சிறை வைக்கப்படுகின்றன
வார்த்தைகளின் போராட்டம்
கண்களில் மௌனமாக!
குளித்திடும்
அழகான மலர்போல்
எதிர்படுகையில்
உன் ஆடை அலங்காரத்தை
நி அணிந்திருக்கும் புன்னகையை
மருண்ட மான்
விழிகளில் தெரியும்
உற்சாகத்தை
பாராட்டதான் ஆசை எனக்கு
ஆனால்
அரை நிமிடம் நின்று
பேசினால் கூட
நீல கண்ணாடி போட்டு
நம்மை காணுமோ
இந்த உலகம் என சிந்தையில்
வினா எழ
வாய் வரை வந்த வார்த்தைகள்
தொண்டைகுழியில் சிறை வைக்கப்படுகின்றன
வார்த்தைகளின் போராட்டம்
கண்களில் மௌனமாக!
Wednesday 6 January 2010
காத்தாடி
நூலறுந்த
காத்தாடியாய் ஆகிப்போனேன்
காற்றடிக்கும் திசையெங்கும்
அலைந்துகொண்டிருக்கிறேன்
பிடித்து நிறுத்துவார் யாருமின்றி
விழுந்துவிட விருப்பமில்லை
வாழ்ந்திடவும் பெரிய திட்டமில்லை
Sunday 20 December 2009
பொய் கோபம்
எல்லோர் கேள்விகளுக்கும்
பதிலளிக்கும் நான்
பதிலிருந்தும் மௌனிக்கிறேன்
உன்னிடம் மட்டும்
எல்லாம் தெரிந்திருந்தும்
ஏனோ
தினமும் கேட்கிறாய் "ஏன் தாமதம்?"
ஒவ்வொரு நாள் முன்னிரவு நேரங்களில்
இப்படித்தான் ஆகின்றது
என் மேல் உன் அக்கறையின்
வெளிப்பாடாய் உன் பொய் கோபம்
என்னை ஊமையாக்குது!
Tuesday 1 December 2009
அடங்காமலே மனம்
அடங்காமலே மனம்
அடாவடி செய்யுதடி
அருகில் நீ இல்லையென அறிந்திருந்தும்
பார்க்கும் பெண்களில்
பாவை உன்னை தேடுதடி
பகலிரவை மறந்து
பழைய நினைவுகளில் முழ்குதடி
என்னதான் செய்தாலும்
என் பேச்சை கேட்க மறுக்குதடி
நான் சொல்வதை செய்ய சொல்லி
நீயாவது சொல்லடி
என் மனதிடம்