காதலில்
காத்திருப்பதும் சுகமாம்
காத்திருந்த எனக்கல்லவா தெரியும்
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பும் - உனக்காக
நான் வாசித்த
வரவேற்பு இசை என்று
விழிகள் துவண்டுவிட்டன
வழி பார்த்து பார்த்து
விரல்கள் எல்லாம் அழுகின்றன - நீ
வராத நேரத்தில்
நகத்தோடு விரல்களையும் கடித்ததால்
யார் யாரோ
நண்பர்களாகிபோனார்கள்
உனக்காக காத்திருந்த நேரத்தில்
இத்தனை சோகங்கள்
உனக்காக - உன்
வரவுக்காக காத்திருக்கையில்
ஆனாலும்
அத்தனையும் மறந்துவிடுகிறது
புல்லின் நுனியில் படுத்துறங்கும் பனித்துளி போல
காதலில் காத்திருப்பதும் சுகம்தான்!
Saturday 28 November 2009
Thursday 26 November 2009
காதல் தோல்வி
கிஞ்சித்தும்
கலையா உன்
மௌன புகைமூட்டத்தின் நடுவே
ஓர் மெல்லிய புன்னகை
ஒளிக்கிற்று
தோன்றியபோது நான்
அறியேன் - அது
என் அந்திமகாலத்தின்
ஆரம்பமென்று
கடைக்கண் பார்வையால்
என் கண் வழியே
இதயத்துள் இடம் பிடித்து
இதயத்தின் தந்திக்கம்பிகளை
நீ மீட்ட தொடங்கியபோது
தெரியாது எனக்கு
அது என் வாழ்வின்
சோக கீதமென்று
ஒவ்வொரு முறையும்
எனை கடந்து செல்கையில்
குளிரிளம் தென்றலாய்
தழுவி சென்றபோது
நான்
அறியவில்லை பெண்ணே அது
ஊழி காத்துக்கு
கட்டியம் கூறும் சாரலென்று
மெல்லிய புன்சிரிப்பையும்
கயல் விழிகளின்
காதல் மொழிகளையும்
கண்டு - உன்
முகவிலாசங்களில் மூழ்கிவிட்ட
நான்
எதிர்பார்க்கவில்லை என் வாழ்வின்
அஸ்தமனத்திற்கு
அதிக தூரமில்லை என்று
கடற்கரை மணல் மீது
காதல் மொழி பேசி
கடல் நீரில் கால் நனைத்தபோது
அலைகளின் அழுகை
எனக்காகதான் என்பதை
அறியாமல் போனேன் பெண்ணே !
Wednesday 25 November 2009
தனிமை
தனிமை இனிக்கவில்லை
உன்னைதவிர எதிலும் கவனம்
நிலைக்கவில்லை
ஊண் உறக்கம் எதையும்
உள்ளம் கேட்கவில்லை
உன் குரல் கேட்க
உன் முகம் நோக்க
உன்னை ஸ்பரிசித்து உயிர்தெழ
காத்திருக்கின்றன ஐம்புலன்களும்
உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும்
உலகம் மெல்ல உருளுவதாய்
தோன்றுகிறது எனக்கு
ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது
பெரும் போராட்டமாய் இருக்கிறது
நிலைமை மோசமாகிகொண்டிருக்க
நீயோ வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறாய்
Saturday 7 November 2009
காதல்
கண்ணுக்கு தெரியா
மாயக்கைறென நம்மை
பிணைத்திருக்கிறது காதல்
என் விழிகளை நோக்காமல்
கவிழ்ந்திருக்கும் உன் இமைகளின் ஓரம்
கசியும் அன்பை
எண்ணி எண்ணி உள்ளம்
தவித்திருக்கிறேன்
காலம் நம்மை தூரங்களில் வைத்தாலும்
காதல் வளர்ந்துகொண்டுதனிருக்கிறது
நானும் நீயும்
பொழியும் அன்பில்
மாயக்கைறென நம்மை
பிணைத்திருக்கிறது காதல்
என் விழிகளை நோக்காமல்
கவிழ்ந்திருக்கும் உன் இமைகளின் ஓரம்
கசியும் அன்பை
எண்ணி எண்ணி உள்ளம்
தவித்திருக்கிறேன்
காலம் நம்மை தூரங்களில் வைத்தாலும்
காதல் வளர்ந்துகொண்டுதனிருக்கிறது
நானும் நீயும்
பொழியும் அன்பில்